வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Sunday, September 19, 2010

கழுத்தைச் சுற்றிய பாம்பு - என்னது நானு யாரா-வின் தவறான மருத்துவத் தகவல்கள்

 அன்பு நண்பர் வசந்த குமாருக்கு, 


  தங்களது "என்னது நானு யாரா?" வலைப்பக்கத்தைப் பார்த்தேன். அதில் உள்ள  கருத்துகளின் அபத்தங்களை உங்களுக்கு தெரியப்படுத்தவே இந்தப் பதிவு. (எதிர் பதிவு போடும் அளவு நம்ம பெரிய ஆளு ஆயிட்டோம். என தாங்கள் சந்தோசப் படுவது எனக்குத் தெரிகிறது. "பெரிய ஆளு" ஆனதற்கு வாழ்த்துக்கள். ஹேப்பி வயசுக்கு வந்த டே) 


        மருத்துவ சம்பந்தமான பதிவுகள் அனைத்தையும் நான் படிக்காமல் விடுவதில்லை என்றாலும், உங்களது பதிவுகளை நான் படிப்பது இல்லை. காரணம், அவலில் தேங்காய் இட்டால் ரெசிப்பி , நாலு பழங்களை நறுக்கி போட்டால் சாலட் போன்ற யாருக்கும் தெரியாத விஷயங்களை நீங்கள் எழுதுவதைப் படித்ததில் இருந்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணம் தான். என்றாலும் உங்களது  "அப்பாடி! மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைச்சதுங்க!" என்ற பதிவை படித்துப் பாருங்கள் முழுவதும் தவறான கருத்துகள் மக்களிடம் சேர்க்கப் பட்டிருக்கின்றன என என் நண்பர் கேட்டதால் படித்தேன். மிகுந்த அதிர்ச்சி.


  பதிவுகளைப்
      பாசிடிவ் பதிவுகள் (மக்களுக்கு தேவையான கருத்து உள்ளவை),
      நியுட்ரல் பதிவுகள் (மொக்கை பொழுதுபோக்குப் பதிவுகள்),
     நெகடிவ் பதிவுகள் (மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்பவை)
     எனப் பிரித்தால், தங்களது அந்தப் பதிவு சத்தியமாக நெகடிவ் பதிவுகளுக்கு கீழ் வருகிறது.


    அந்தப் பதிவின் ஆரம்பம் முதல் கடைசிவரை அனைத்தும் அபத்தம், அறியாமையின் உச்சம். கருப்பை நீக்கியவர்களுக்கு மாதவிடாய் எப்படி வரும் என்று கேட்டால் ஒரு லிங்க் கொடுத்தீர்கள். அது " Menstruation - Is it Really Necessary?". என்ற தலைப்பிலான கட்டுரை.(கேட்ட கேள்விக்கும் குடுத்த லிங்க்க்கும் என்ன ஒரு தொடர்பு) அதில் எந்த இடத்திலும் கருப்பை இல்லாதவர்களுக்கு மாதவிடாய் வரும் என்று குறிப்பிடவே இல்லை. மாதவிடாய் என்பதே கருப்பையில் இருந்து வெளியேறும் இரத்தம் தான். கருப்பை இல்லாமல் அது வர வாய்ப்பே இல்லை.  நமது  உடலைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் மருத்துவப் பதிவு எழுதும் தங்களுக்கு பனிரெண்டாம் வகுப்பு பயாலஜி புக்கை பரிசாக அனுப்ப நினைத்துள்ளேன். (இந்த இடத்தில் டாக்டர் நீங்க +2 பாஸ் பண்ணீட்டிங்க காமெடி நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது) .


  அந்தப் பதிவில்   
       "////1983 மார்ச் மாசம் எனக்கு Tubal Pregnancy-க்காக, முதல் ஆபரேஷன் நடந்தது. Fallopian Tube-ல ஒன்னு வெடிச்சிடுச்சி. 45 நாள் கருவோட அந்த ட்யூபை வெட்டி எடுத்திட்டாங்க.////"
    என எழுதிருக்கீங்க.
   நீங்கள் இங்கு குறிப்பிட்டு உள்ள "Ruptured ectopic pregnancy" -யின் முழு வீரியம் தெரியுமா? அந்த நோயாளியைப் பக்கத்தில பார்த்திருக்கிங்களா? உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் ஆள் அவுட்.
   ஆங்கில மருத்துவத்தில் இதைக் கண்டறிய ஸ்கேன் செய்து பார்ப்போம். ectopic pregnancy Rupture ஆகி விட்டது எனத் தெரிந்து விட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுவோம். உங்கள் வைத்திய முறையில் எப்படி இதைக் கண்டு பிடிப்பீர்கள்? வெத்தலைல மை தடவியா? அப்படியே கண்டு பிடிச்சு என்ன பண்ணுவிங்க? வாழை இலைல சுத்தி படுக்க வச்சா சரி ஆகிடுமா? அநியாயமா ஏன் ஒரு உயிரை கொல்லப் பாக்குறிங்க? 


      சென்னை பொது மருத்துவமனையில் தினமும் ஒரு Ruptured ectopic pregnancy யாவது வருகிறது. உங்களை அழைத்துச் செல்கிறேன். அவர்களில் ஒரே ஒருவரை உங்கள் மருத்துவ முறையால் காப்பற்ற இயலுமா? ஒரு மணி நேரத்திற்குள் விரைந்து செயலாற்ற வேண்டும். இல்லை என்றால் ஒரு தாயின் உயிரை பறித்தவர் என்ற பழி வந்து சேரும். உடனடியாக நான் மருத்துவர் இல்லை என்று மேதாவியாக தப்பிக்கப் பார்க்காதீர்கள். நீங்கள் பரிந்துரைக்கும் மருத்துவ முறையில் உள்ள மருத்துவர் யார் வேண்டுமானாலும் காப்பாற்றிக் கொடுக்கட்டும் பார்க்கலாம். உங்களால் முடியாது. தேவை இல்லாமல் அந்தத் தாய் தான் உயிரிழப்பார். ஓப்பனா கேக்குறேன். Ruptured ectopic pregnancy-க்கு அறுவை சிகிச்சை தப்புன்னு சொல்ற உங்க மருத்துவ முறை எப்படி இத சரி பண்ணி உயிரை காப்பாத்தும்?  


     உங்களது பதிவு ஏற்படுத்திய நச்சு விளைவை மேலோட்டமாகப் பார்க்காதீர்கள். ஒரு Ruptured ectopic pregnancy நோயாளி பதிவைப் படித்து விட்டு வெறும் பழம் மட்டும் சாப்பிடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவளின் கதி என்ன? அந்தப் பாவம் முழுவதும் உங்களைச் சாரும். 


   அறுவை சிகிச்சை பண்ணியதால சளி இருமல் வந்துச்சாம். இந்த பதிவ படிக்கிற மக்களே, உங்களுக்கு தெரிஞ்சு எத்தனையோ பேர் அறுவை சிகிச்சை பண்ணிருப்பாங்க. அல்லது நீங்களே பண்ணிருப்பிங்க. உங்கள்ல எத்தனை பேருக்கு சளி இருந்துகிட்டே இருக்கு? அறுவை சிகிச்சை பண்ணாத மக்களே உங்கள்ல எத்தனை பேருக்கு சளி இல்ல? 
    இப்படிப் பட்ட கருத்துக்கள் அறியாமையின் உச்சம். உங்களது அறியாமையை இப்படி பப்ளிக்கா காட்டாதிங்க. 


     அநோரேக்சியா நெர்வோசா (anorexia nervosa) பற்றி தெரியுமா? இளம்பெண்கள் குண்டாகக் கூடாதுன்னு சாப்பாட குறைச்சுடுவாங்க. அப்ப அவங்க உடம்புல சத்து குறைவால மாத விலக்கு வராம போய்டும். மாடலிங் துறையில் இருக்கும் இளம்பெண்களிடம் இருக்கும் வியாதி இது. நெட்ல படிச்சுப் பாருங்க. மூணு நாள் தூங்காம படிக்கலாம். அவ்ளோ மேட்டர் கிடைக்கும். நீங்க சொல்றதும் இது போல மன வியாதி தான். (பைத்தியம்னு சொல்வாங்களே அதுவா? அவ்வ்வ்வ்)
   
   அடுத்த பதிவு இவரது வைத்திய முறையால் மூளைக் கட்டி குணம் ஆச்சாம். அந்த பதிவின் சாரம் இது தான். இவருக்கு தெரிந்த ஒருவருக்கு மூளையில் கட்டி இருந்ததாம்(8.2செ.மி நீளம்.). ஆங்கில வைத்திய முறையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி விட்டார்கள். நம்ம ஹீரோ அவரை ஒரு மாற்று மருத்துவமனையில் சேர்க்கிறார். அவருக்கு குணமாகி விட்டது. அதாவது அந்த மருத்துவர் உனக்கு சரியாகி விட்டது எனக் கூறுகிறார். (நன்றாக கவனிக்கவும். குணமடைந்ததிற்கு எந்த ஆதாரமும் இல்லை) அவ்ளோ தான். ஆனால் திரும்ப ஸ்கேன் எடுத்து பார்த்து கட்டி கரைந்து விட்டதா என உறுதி செய்ய மாட்டார். அதற்குள் முழுவதுமாக குணம் ஆகி விட்டதாக பதிவு போடுவார். இதில் ஒரு காமெடி என்ன தெரியுமா? அவர்கள் செய்தது symptomatic treatment. அதாவது நோயை குணப்படுத்தாமல் நோயின் வெளிப்பாடுகளை தீர்ப்பது. அதையே தான் ஹீரோ என்டரிக்கு முன்பு பாராசிட்டமால் செய்து வந்தது. என்ன...........? அதன் விலை எழுபத்தைந்து பைசா. ஹீரோ செய்த வைத்தியத்தின் விலை இருபது ஆயிரம். உங்க வைத்திய முறை ரொம்ப செலவு கம்மி தலைவரே. (பாவம் அந்த நோயாளி. என்னைக்கு அந்த கட்டி வெடிக்கப்போதோ? அதற்குள் ஸ்கேன் செய்து கட்டியின் தற்போதைய நிலையை கண்டறிந்து, அவர்  சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொள்கிறேன்.)


  மருத்துவம் என்பது நீங்கள் விளையாட நினைக்கும் மைதானம் அல்ல. அது உயிர் காக்கும் தொழில். தப்புத் தவறாக தங்களுக்கு தெரிந்த அரைகுறை மருத்துவ விசயங்களை பதிவுகளாகப் போட்டு, பலரின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டாம். சரியாகத் தெரிந்தால் போடுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள். அது தான் மிகப் பெரியத் தொண்டு.


  உங்களது முதல் பதிவிலேயே நான் மருத்துவன் இல்லை எனக் கூறிய தாங்கள், சிரிப்பு போலிஸ் அவர்களது பதிவின் பின்னூட்டத்தில் 
///
என்னது நானு யாரா? சொன்னது…
//யாராவது அடிக்க வந்தா என்னை காப்பாத்திகிறதுக்கு ஏதாச்சும் இயற்க்கை வைத்தியம் உண்டா பங்காளி?// //தெரியாதுன்னு சொல்லுங்க. முடியாதுன்னு சொல்லாதிங்க. ஐயோ ஒரு ஞான சூநியத்துகிட்ட வந்து மாட்டிக்கிட்டனே(ஒருவேளை போலி டாக்டரா இருக்குமோ?)// போலி டாக்டரு இல்ல! ஜாலி டாக்டரு! ஒருத்தரு அடிப்பட்டா, ஒரு பேஷண்ட் எனக்கு கிடைக்கும் இல்ல! அதனால நான் ஜாலி டாக்டரு! அடிப்படறதுக்கு பயம்னா பேசாம எதிர் கட்சி ஆளுங்க கிட்ட சரண்டர் ஆக வேண்டியது தானே?
  மருத்துவராக மாற நினைப்பது ஏன்? தன்னைத் தானே டாக்டர் என அழைத்துக் கொள்கிறீர்களே? (ரமேஷ் அண்ணா, விளம்பரத்துக்கு இன்னும் காசு வரல அனுப்பி வைங்க.)


   ஆங்கில மருத்துவம் கொல்கிறது என் வரிக்கு வரி சொல்லும் உங்கள் பதிவில் இரத்தக் கொடை, கண் தானம் பற்றிய அறிவிப்புகள் உள்ளன. எப்ப பங்காளி இயற்கை வைத்தியத்தில இரத்தம் ஏற்றுவதையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையையும் சேர்த்தாங்க? ஏன் பங்காளி இரட்டை வேடம்? 


    ஆங்கில மருத்துவம் பற்றிய கேள்விகளுக்கு எனது பதிவில் விரிவான விளக்கம் அளித்து இருந்தேனே. அதைப் பற்றி தங்களால் ஒரு வார்த்தை கூட பேச முடிய வில்லையே. 


   உங்களது பதிவு மருத்துவ அறிவை வளர்க்கவில்லை. அறியாமையை தான் வளர்க்கிறது. அதில் உள்ள அபத்தங்களை இது போல பட்டியல் இட்டுக் கொண்டே சென்றால் படிப்பவர்களுக்கு மூச்சு முட்டிவிடும். அதனால் இத்துடன் முடிக்கிறேன்.  நீங்கள் கூற வந்த நோக்கம் நல்லதாக இருந்தாலும் கருத்துகள் சரி இல்லை. எனவே வேண்டாம். விட்ருங்க.


      ஆன்மீகத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள், நான் ஒன்றும் கேட்க மாட்டேன், ஏனென்றால் அது எனக்கு தெரியாது, அது எனக்கு பிடிக்காது, அது எனக்கு தேவை இல்லை. ஆனால் மருத்துவத்தைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதினால் எனக்கு கட்டாயம் கோவம் வரும், ஏனென்றால், அது எனக்குத் தெரியும், அது எனக்கு பிடிக்கும், அது எனக்கு தேவையான விஷயம்.


    தாங்கள் எப்போதும் போல, "அவலில் தேங்காய் போட்டு செய்யும் ரெசிப்பிகள்", "பழத்தை நறுக்கிப் போட்டால் சாலட்" போன்ற யாருக்கும் தெரியாத விசயங்களை எழுதிக் கொண்டு இருங்கள். தேவை இல்லாமல் மருத்துவ கருத்து என்ற பெயரில் கீரை விற்க வேண்டாம். இன்னொரு சேலம் சித்த மருத்துவராக, மான்கறி விஜயகுமாராக உருவாக வேண்டாம். அது பலரின் வாழ்கையைப் பாதிக்கும்.


 உங்க பாணியிலேயே பதில் சொல்வதானால், பங்காளி உங்க சரக்கு எல்லாம் சரி இல்ல. டூப்ளிகேட். கள்ள சாராயம். வேணாம் விக்காதீங்க.


டிஸ்கி: நண்பரே! உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் இல்லை. இது கருத்து மோதலே.


      

41 comments:

என்னது நானு யாரா? said...

எனக்கு எதிர் பதிவு இட்டு என்னைப் பிரபலப் படுத்தறீங்க! ரொம்ப நன்றி நண்பா!

//என்ன பாஸ் காமெடி பண்றீங்க? கர்ப்பபை எடுத்த பிறகு எப்படி பாஸ் மாதவிலக்கு வரும்? கொஞ்சமாவது லாஜிக்கோட எழுதுங்க பாஸ்//



அதற்கு நான் இட்ட பதில்

பாஸ்! உங்க கேள்வி சரிதான். இந்த கட்டுரையோட நோக்கமே, ஏதோ பெண்ணாக பிறந்து விட்டாலே, மாதவிலக்கு என்கின்ற ஒரு விஷயம் நடந்தே தீரும் என்கின்ற நம்பிக்கையை மாற்றுவது தான். மாத விலக்கு இயற்கை அல்ல. அது செயற்கையான ஒரு செயல் தான் என்ற தகவலை மக்களுக்கு கொடுப்பதற்காகத் தான் எழுதப்பட்டது.

உங்களின் கேள்விக்கு நேரடியான என்னுடைய பதில் - கற்ப பையை நீக்கி விட்டால், அதற்குப் பிறகு மாதவிலக்கு சாத்தியமல்ல.

இந்த கட்டுரையில் இடம்பெற்ற பெண் பல உடல் உபாதைகளால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தார். அதில் ஒன்று மாதவிலக்கினால் வரும் பெரும் பிரச்சனைகள். இயற்கை உணவிற்குப் பிறகு எல்லா பிரச்சனைகளும் நீங்கின என்கின்ற கருத்தைத் தான் அப்படி சொல்லி இருக்கின்றார்.

அந்த லிங்கில் கருபபையை நீக்கினால் மாதவிலக்கு இருக்காது என்பது இல்லை. அந்த தவறுக்கு மன்னிப்பு கோறுகின்றேன்.

இயற்கை மருத்துவத்தினால் எந்தவித Emergencies-களையும் கையாள முடியாது. விபத்துக்கள், நீங்கள் கூறிய Emergencies cases எல்லாம் ஆங்கில மருத்துவத்தை நாடுவதை தவிர வேறு வழி இல்லை.

மனிதன் இயற்கையோடு வாழ்ந்தால் செயற்கையாக நிகழும் Emergency situations வராமல் இருக்கலாம் என்பது தான் இயற்கை மருத்துவத்தின் கொள்கை.

ஆனால் Acute diseases, Chronic diseases என்று ஏகப்பட்ட நோய்கள் இருக்கின்றன. அவைகளை எல்லாம் முழுமையாக் குணமாக்கலாம். பலரும் பயனடைந்திருக்கிறார்கள்.

இயற்கை மருத்துவம் எந்த ஒரு பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம், இரசாயணங்களை உடலினுள் செலுத்தாக மருத்துவம்.

என்னது நானு யாரா? said...

இயற்கை மருத்துவத்தினால் மூளைக் கட்டி குணமாகி நலமாக என்னுடைய மாமா சாதரணமாக செய்யும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்.

உங்களுக்கு அவரை பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் என்னைத் தொடர்புக் கொள்ளுங்கள். அவருடைய செல் நம்பரைக் கொடுக்கின்றேன்.

என்னது நானு யாரா? said...

உங்களது முதல் பதிவிலேயே நான் மருத்துவன் இல்லை எனக் கூறிய தாங்கள், சிரிப்பு போலிஸ் அவர்களது பதிவின் பின்னூட்டத்தில்
///
என்னது நானு யாரா? சொன்னது… //யாராவது அடிக்க வந்தா என்னை காப்பாத்திகிறதுக்கு ஏதாச்சும் இயற்க்கை வைத்தியம் உண்டா பங்காளி?// //தெரியாதுன்னு சொல்லுங்க. முடியாதுன்னு சொல்லாதிங்க. ஐயோ ஒரு ஞான சூநியத்துகிட்ட வந்து மாட்டிக்கிட்டனே(ஒருவேளை போலி டாக்டரா இருக்குமோ?)// போலி டாக்டரு இல்ல! ஜாலி டாக்டரு! ஒருத்தரு அடிப்பட்டா, ஒரு பேஷண்ட் எனக்கு கிடைக்கும் இல்ல! அதனால நான் ஜாலி டாக்டரு! அடிப்படறதுக்கு பயம்னா பேசாம எதிர் கட்சி ஆளுங்க கிட்ட சரண்டர் ஆக வேண்டியது தானே? 17 செப்டெம்ப்ர், 2010 10:03 am ///// மருத்துவராக மாற நினைப்பது ஏன்? தன்னைத் தானே டாக்டர் என அழைத்துக் கொள்கிறீர்களே? (ரமேஷ் அண்ணா, விளம்பரத்துக்கு இன்னும் காசு வரல அனுப்பி வைங்க.)

அவர், மற்றவர்களும் காமெடியாக பல விஷயங்களை சொல்லி எல்லோரையும் கேலி செய்வார்கள். நான் இயற்கை மருத்துவத்தினைப் பற்றி தொடர்ந்து எழுதி வருவதால் என்னை அவர்கள் டாக்டர் என்று சொல்லி கேலி செய்து இருக்கிறார்.

நான் டாக்டரெல்லாம் இல்லை என்று என்னுடைய பதிவில் ஏற்கனவே சொல்லிவிட்டேன் நண்பா!

அப்படி யாராவது நம்பி என்னைத் தொடர்புக் கொண்டால் நான் அவர்களை, சரியான மருத்துவமனையின் விலாசம் கொடுத்து அனுப்பி விடுகிறேன்.

என் நோக்கம் எல்லாம், மனிதன் நோய் இல்லாமல் வாழ வழி இருக்கிறது. அப்படி நோய் வந்தாலும் அதனை போக்கிக் கொள்ள எளிய வழி, செலவுக் குறைந்த வழி, பக்கவிளைவுகள் இல்லாத வழி இயற்கை மருத்துவம் இருக்கிறது என்று சொல்வது தான்.

ஆங்கில மருத்துவம் மனிதர்களைக் கொல்கிறது

http://newyorkbodyscan.com/doctors.html

கொடுத்திருக்கும் லிங்கில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.

மரணபடுக்கையில் இருந்து எத்தனை எத்தனை மனிதர்களை காப்பாற்றியது இயற்கை மருத்துவம் என்பது பெரிய பட்டியல்.

அதன் சிறப்பை உணர்ந்து தான் காந்தியடிகள் அவர்களே அதனை எல்லோருக்கும் சிபாரிசு செய்தார்.

என்னது நானு யாரா? said...

// ஆங்கில மருத்துவம் கொல்கிறது என் வரிக்கு வரி சொல்லும் உங்கள் பதிவில் இரத்தக் கொடை, கண் தானம் பற்றிய அறிவிப்புகள் உள்ளன. எப்ப பங்காளி இயற்கை வைத்தியத்தில இரத்தம் ஏற்றுவதையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையையும் சேர்த்தாங்க? ஏன் பங்காளி இரட்டை வேடம்?//

இது எல்லாம் இயற்கை மருத்துவத்தில் சேர்திருக்கிறார்கள் என்று நான் சொல்லவே இல்லையே. ஒவ்வொரு மருத்துவத்திற்கும் ஒரு Limitation இருக்கிறது என்று புரியாதவனா நான்?

இயற்கை மருத்துவத்தில் ஆபரேஷ்ன்கள் எல்லாம் கிடையாது. முன்பே சொன்னதைப் போன்று Emergency cases எல்லாவற்றையும் ஆங்கில மருத்துவத்தில் தான் சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும். இதில் கண் தானமும் இரத்த தானமும் கூட அடக்கம் தான்.

என்னது நானு யாரா? said...

// ஆங்கில மருத்துவம் பற்றிய கேள்விகளுக்கு எனது பதிவில் விரிவான விளக்கம் அளித்து இருந்தேனே. அதைப் பற்றி தங்களால் ஒரு வார்த்தை கூட பேச முடிய வில்லையே.//

நீங்கள் எழுதியதே இன்று இப்போது இந்த பதிவினைப் பார்த்தே தெரிந்துக் கொண்டேன்.

என்னுடைய கருத்து செயற்கை முறையில் இரசாயணங்களை ஆங்கில மருத்துவம் செய்வதுப் போன்று, உடம்பினுள் செலுத்துவது தவறு

நமக்கு வேண்டிய தாதுக்கள் எல்லாம் இயற்கை முறையாக உண்ணும் உணவு மூலம் உடலுக்கு கிடைக்கும் போது அதனை உடல் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் செயற்கையாக அவை உட்செலுத்தும் போது அதனால் உடல் பாதிப்பு அடைகிறது

Indian tradion medicines, Unani, Siddha, Ayurvedha, மற்றும் Naturopathy எல்லாமும் கூட நம் நாடு அங்கீகாரம் அளித்த மருத்துவ முறைகள் தான்.

அவற்றைப் முறையாக பட்டப் படிப்பாக படிக்க பல ஆண்டுகள் செலவிட்டே படிக்கிறார்கள். அதனால் அவற்றை பற்றி ஏளனமனாக எண்ணி விட வேண்டாம்.

என்னது நானு யாரா? said...

இயற்கை மருத்துவத்தின் பயன்களைப் பற்றி நம்புவதும் நம்பாமல் இருப்பது உங்களின் உரிமை பாஸ்!

நானும், என்னைப் போன்ற இயற்கை வாழ்வியல் ஆர்வலர்களும் அதனை நம்புகின்றோம். நோய் இல்லாமல் வாழ வழி இருக்கிறது என்று காட்டுக்கின்றோம்.

யார் அதனை கேட்க விரும்புகிறார்களோ, கேட்கட்டும். விதைகளைத் தூவி விடுவது தான் என்னுடைய வேலை.

என் நோக்கம், தகவல்களை பரிமாறிக் கொள்ளுவது. யாருக்காவது, அவற்றை எடுத்துக் கொள்ள விருப்பம் இருந்தால், எடுத்துக் கொள்ளட்டும்.

கைக்காட்டி மரத்தின் வேலையை தான் நான் செய்கிறேன். இதனால் எனக்கு கிடைப்பது பணம் ஏதும் இருக்க முடியாது என்று நீங்கள் தெரிந்திருப்பீர்கள். எனக்கு கிடைப்பது ஆதம் திருப்தி மட்டுமே! நன்றி நண்பா!

அலைகள் பாலா said...

//இயற்கை மருத்துவம் எந்த ஒரு பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம், இரசாயணங்களை உடலினுள் செலுத்தாக மருத்துவம். ///

இதுக்கு ஆதாரமே இல்லையே பாஸ்.

அலைகள் பாலா said...

///ஆனால் Acute diseases, Chronic diseases என்று ஏகப்பட்ட நோய்கள் இருக்கின்றன. அவைகளை எல்லாம் முழுமையாக் குணமாக்கலாம். பலரும் பயனடைந்திருக்கிறார்கள்.///

"Ruptured ectopic pregnancy" Acute disease தான் பாஸ். ஏன் குணமாக்கல?

அலைகள் பாலா said...

///அந்த லிங்கில் கருபபையை நீக்கினால் மாதவிலக்கு இருக்காது என்பது இல்லை. அந்த தவறுக்கு மன்னிப்பு கோறுகின்றேன்.///

உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு.

அலைகள் பாலா said...

///இயற்கை மருத்துவத்தினால் மூளைக் கட்டி குணமாகி நலமாக என்னுடைய மாமா சாதரணமாக செய்யும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். ////
மூளைக் கட்டி குணமானது என எதை வைத்து கூறுகிறீர்கள்?
அந்த வைத்தியம் செய்யாமல் இருந்தாலும் இப்படித் தானே இருந்திருப்பார்.

அலைகள் பாலா said...

//இயற்கை மருத்துவத்தினால் எந்தவித Emergencies-களையும் கையாள முடியாது. விபத்துக்கள், நீங்கள் கூறிய Emergencies cases எல்லாம் ஆங்கில மருத்துவத்தை நாடுவதை தவிர வேறு வழி இல்லை. ///

இதுலயும் உங்க நேர்மை பிடிச்சுருக்கு. அப்புறம் ஏன் ஆங்கில மருத்துவம் கொல்லும் அன்று சொல்கிறீர்கள்? கொல்லும் மருத்துவத்தை ஏன் நாடுகிறீர்கள்?

அலைகள் பாலா said...

//நான் டாக்டரெல்லாம் இல்லை என்று என்னுடைய பதிவில் ஏற்கனவே சொல்லிவிட்டேன் நண்பா!///

எனவே மருத்துவ பதிவு எழுதும் போது கவனமாக எழுதவும். பிழை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அலைகள் பாலா said...

//ஆங்கில மருத்துவம் மனிதர்களைக் கொல்கிறது

http://newyorkbodyscan.com/doctors.html

கொடுத்திருக்கும் லிங்கில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.
///

இந்த மாதிரி ஒரு ஒரு மருத்துவ முறை மீதும் குறை கூறி ஆயிரம் லிங்க்கள் கிடைக்கும்

Anonymous said...

என்னது நானு யாரா? வை முழுமையாக குறை சொல்ல முடியாது.நிறைய ஆக்க்ப்பூர்வமான கருத்துக்களை எழுதி வருகிறார்.உங்கள் கருத்து சம்பந்தபட்ட மாதவிலக்கு கட்டுரையில் இருக்கும் சிறு முரண்பாடு பற்றிய கேள்விகள் என நினைக்கிறேன்..உங்கள் சந்தேகங்கள் நியாயமானவை.

Anonymous said...

இயற்கை மருத்துவம் எந்த ஒரு பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம், இரசாயணங்களை உடலினுள் செலுத்தாக மருத்துவம். ///

இதுக்கு ஆதாரமே இல்லையே பாஸ்//

இது செம முரண்பாடு...
ஓ..நீங்கள் ஒட்டு மொத்த இயற்கை மருத்துவத்தையே எதிர்ப்பவரா..அப்ப நான் எஸ்கேப்

அலைகள் பாலா said...

//இயற்கை மருத்துவத்தில் ஆபரேஷ்ன்கள் எல்லாம் கிடையாது. முன்பே சொன்னதைப் போன்று Emergency cases எல்லாவற்றையும் ஆங்கில மருத்துவத்தில் தான் சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும். இதில் கண் தானமும் இரத்த தானமும் கூட அடக்கம் தான்.///

அப்புறம் ஏன் பாஸ் ஆங்கில மருத்துவம் கொல்லும்"னு சொல்றிங்க?

இரத்த தானம் கண் தானம் இதனால் யாரும் வாழ்ந்ததே இல்லையா?

அலைகள் பாலா said...

//Indian tradion medicines, Unani, Siddha, Ayurvedha, மற்றும் Naturopathy எல்லாமும் கூட நம் நாடு அங்கீகாரம் அளித்த மருத்துவ முறைகள் தான்.

அவற்றைப் முறையாக பட்டப் படிப்பாக படிக்க பல ஆண்டுகள் செலவிட்டே படிக்கிறார்கள். அதனால் அவற்றை பற்றி ஏளனமனாக எண்ணி விட வேண்டாம்.///

எண்ணியது கிடையாது. அதே போல தாங்களும் ஆங்கில மருத்துவத்தை ஏளனமாக எண்ண வேண்டாம்.

அலைகள் பாலா said...

//நானும், என்னைப் போன்ற இயற்கை வாழ்வியல் ஆர்வலர்களும் அதனை நம்புகின்றோம். நோய் இல்லாமல் வாழ வழி இருக்கிறது என்று காட்டுக்கின்றோம்.

யார் அதனை கேட்க விரும்புகிறார்களோ, கேட்கட்டும். விதைகளைத் தூவி விடுவது தான் என்னுடைய வேலை. //

நல்ல விதைகளை தூவுங்கள் பாஸ். நச்சு விதைகள் வேண்டாம்.

அலைகள் பாலா said...

இது போன்ற கருத்து வேறுபாடு எழுந்திருக்காவிட்டால் சாதாரண மக்கள் கருப்பை எடுத்தாலும் மாதவிலக்கு வரும் என்றே எண்ணியிருப்பர். அது போன்ற தவறான கருத்துகளுக்கு இட்டு செல்ல வேண்டாம்.

அலைகள் பாலா said...

//என்னது நானு யாரா? வை முழுமையாக குறை சொல்ல முடியாது//
இதை நான் ஆதரிக்கிறேன். அவரது மருத்துவ பதிவில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டவே இந்த பதிவு.

அலைகள் பாலா said...

//இயற்கை மருத்துவம் எந்த ஒரு பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம், இரசாயணங்களை உடலினுள் செலுத்தாக மருத்துவம். ///

இதுக்கு ஆதாரமே இல்லையே பாஸ்//

இது செம முரண்பாடு...
ஓ..நீங்கள் ஒட்டு மொத்த இயற்கை மருத்துவத்தையே எதிர்ப்பவரா..அப்ப நான் எஸ்கேப்//

இதுவரை எந்த ஒரு ஆதாரத்தையும் நான் பார்த்தது இல்லை. புருனோ சாரிடம் கேளுங்கள். அவற்றின் பக்க விளைவுகளை பக்கம் பக்கமாக எழுதி உள்ளார்.

அலைகள் பாலா said...

//உங்கள் கருத்து சம்பந்தபட்ட மாதவிலக்கு கட்டுரையில் இருக்கும் சிறு முரண்பாடு பற்றிய கேள்விகள் என நினைக்கிறேன்///

அந்த கட்டுரையே முரண்பாடு நண்பா.

அலைகள் பாலா said...

//என் நோக்கம், தகவல்களை பரிமாறிக் கொள்ளுவது. யாருக்காவது, அவற்றை எடுத்துக் கொள்ள விருப்பம் இருந்தால், எடுத்துக் கொள்ளட்டும்.///

சரியான தகவல்களை பரிமாறுங்கள். நீங்கள் கையில் எடுத்துள்ளது மருத்துவம். ரொம்ப ரிஸ்க். ஒரு உயிர் பலி ஆவதற்கு காரணம் ஆகி விடாதீர்கள்.

Philosophy Prabhakaran said...

பாவம் பாஸ்... புது பதிவர் ஏதோ ஆர்வக்கோளாரில் எழுதிவிட்டார்... அவர் மனம் நோகாதபடி பின்னூட்டத்திலோ மெயிலிலோ தெரிவித்திருக்கலாமே... பாலா ரொம்ப கோபக்காரரோ...

என்னது நானு யாரா? said...

//"Ruptured ectopic pregnancy" Acute disease தான் பாஸ். ஏன் குணமாக்கல?//

இயற்கை மருத்துவத்தில Acute diseases-ன்னு சொல்றது, தலைவலி, ஜலதோஷம், இருமல், காய்ச்சல், வயித்துவலிப் போன்றவை

Chronic diseases என்று சொல்றது சர்கரை வியாதி, இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் போன்றவை.

Acute diseases-சை இயற்கை மருத்துவத்தில் குணப்படுத்தாம விட்டால் அதுங்க எல்லாமே வளர்ந்து chronic diseases condition-க்கு வந்திடும்.

மத்தபடி நீங்க சொல்லி இருக்கிற case எல்லாம் டீல் செய்ய மாட்டாங்க. அதுக்கான வசதிகள் எல்லாம் இயற்கை மருத்துவத்தில இல்லை.

என்னது நானு யாரா? said...

//மூளைக் கட்டி குணமானது என எதை வைத்து கூறுகிறீர்கள்?
அந்த வைத்தியம் செய்யாமல் இருந்தாலும் இப்படித் தானே இருந்திருப்பார்.//

பயங்கரமான தலைவலியோடு எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் சேர்ந்து கிடப்பார். மயகக் நிலையிலேயே இருப்பார். அவரை பார்க்கும் போதே சீக்கிரம் இறந்து விடுவார் என்றே எண்ணத் தோன்றியது.

இப்போது அவருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. வேலைக்கும் போய் வருகிறார். எல்லா வேலைகளையும் இயல்பாக செய்ய முடிகிறது. மகிழ்ச்சியாகவே இருக்கிறார்.

என்னது நானு யாரா? said...

//இயற்கை மருத்துவத்தினால் எந்தவித Emergencies-களையும் கையாள முடியாது. விபத்துக்கள், நீங்கள் கூறிய Emergencies cases எல்லாம் ஆங்கில மருத்துவத்தை நாடுவதை தவிர வேறு வழி இல்லை. ///

இதுலயும் உங்க நேர்மை பிடிச்சுருக்கு. அப்புறம் ஏன் ஆங்கில மருத்துவம் கொல்லும் அன்று சொல்கிறீர்கள்? கொல்லும் மருத்துவத்தை ஏன் நாடுகிறீர்கள்?//

நான் தான் ஏற்கனவே இயற்கை மருத்துவத்திற்கு உள்ள Limitations - களைப் பற்றி சொல்லி இருக்கிறேனே. எதை எல்லாம் இயற்கை மருத்துவத்தினால் டீல் செய்ய முடியாத case-களோ, அவைகளை ஆங்கில மருத்துவ முறையினால் சிகிச்சை அளித்திடுங்கள் என்று தான் இயற்கை மருத்துவர்கள் சொல்லுவார்கள் நண்பரே!

என்னது நானு யாரா? said...

//நான் டாக்டரெல்லாம் இல்லை என்று என்னுடைய பதிவில் ஏற்கனவே சொல்லிவிட்டேன் நண்பா!///

எனவே மருத்துவ பதிவு எழுதும் போது கவனமாக எழுதவும். பிழை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.//

அந்த பதிவின் கீழேயே, அது "இயற்கை வாழ்வே நோய் தீர்க்கும் மருந்து" என்கின்ற புத்தகத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது என்று தானே எழுதி இருந்தேன்.

நான் ஏதும் சொந்தமாக எழுதவில்லை நண்பரே! ஒரு பெண்மணியின் இயற்கை மருத்துவ அனுபங்களை, அந்த புத்தகத்தில் எழுதி இருந்தார்கள். அதனை நான் பதிவில் கொடுத்தேன். அவ்வளவு தான்.

என்னது நானு யாரா? said...

//யார் அதனை கேட்க விரும்புகிறார்களோ, கேட்கட்டும். விதைகளைத் தூவி விடுவது தான் என்னுடைய வேலை. //

நல்ல விதைகளை தூவுங்கள் பாஸ். நச்சு விதைகள் வேண்டாம்.//

இயற்கை மருத்துவத்தில் நச்சுத் தன்மைக்கு இடமே இல்லை. செயற்கையான இரசாயணங்கள் உட்செலுத்தும் முறை இல்லாதது அது. அதனால் நச்சு விதைகளுக்கு வாய்ப்பே இல்லை.

ஆங்கில மருத்துவத்தில் தான் நச்சு மருந்துகள் அதிகம் பயன்படுகின்றன. அதனால் ஆங்கில மருத்துவத்தைப் பற்றித் தான் என்னைப் போன்றவர்களுக்கு பயம்!

என்னது நானு யாரா? said...

//இந்த மாதிரி ஒரு ஒரு மருத்துவ முறை மீதும் குறை கூறி ஆயிரம் லிங்க்கள் கிடைக்கும்//

எத்தனைப் பேர் ஆங்கில மருத்துவத்தால் இறந்திருக்கிறார்கள் என்று, அதில் கணக்கு விவரம் தானே கொடுத்திருக்கிறார்கள். உண்மை இல்லாத பட்சத்தில் அதனை யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா?

உங்கள் அனுபவத்தில், ஆங்கில மருத்துவர்கள் எல்லா நோயாளிகளையும் குணப்படுத்தி நல்லபடியாக அனுப்புகின்றீர்களா?

என்னது நானு யாரா? said...

போதும் நண்பா! உங்கள் பதிவுக்கு நான் பதில் எழுதி, பின் என் பதில்களுக்கு நீங்கள் பதில் எழுதி, மறுபடியும் அந்த பதில்களுக்கு நான் பதில்கள் எழுதி, திரும்பவும் என் பதில்களுக்கு நீங்கள் பதில் எழுதி, மறுபடியும் அந்த பதில்களுக்கு நான் பதில்கள் எழுதி, அதை நீங்கள் படித்து, மறுபடியும் நீங்கள் அவைகளுக்கு பதில் எழுதி,....

வேண்டும்! போதும் நண்பரே! நன்றி

selvi said...

i have a doubt
do animals have mensus problem?

அலைகள் பாலா said...

yes. but it is different. they have cycles every year, or particular period of time. on that time they ovulate multiple ovum. (instead, human beings ovulate single ovum in every month., so we are giving birth to single child). so animals able to give so many offspring in a single time.

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

என்னது நானு யாரா? வை முழுமையாக குறை சொல்ல முடியாது.நிறைய ஆக்க்ப்பூர்வமான கருத்துக்களை எழுதி வருகிறார்.உங்கள் கருத்து சம்பந்தபட்ட மாதவிலக்கு கட்டுரையில் இருக்கும் சிறு முரண்பாடு பற்றிய கேள்விகள் என நினைக்கிறேன்..உங்கள் சந்தேகங்கள் நியாயமானவை.
நன்றி :ஆர்.கே.சதீஷ்குமார் said... மேலே உள்ள கருத்தை ஆமோதிக்கிறேன்...!

மற்றும் இதை சுட்டிக்காட்டிய "அலைகள் பாலா" அவரது பதிவையும் குறைச்சொல்ல முடியாது..!இது நண்பர்களிடம் வெறும் பேச்சொடு போய்விடுகிற விசயமில்லை..இதை உலகமெல்லாம் படிக்கின்ற ஊடகம்..பலரின் பார்வைக்கு செல்கின்ற ஊடகம்..!இனி கவனமாக அவர் மட்டுமில்லை...இந்த பதிவை வாசிக்கின்ற அனைத்து பதிவரும் தாங்கள் எழுதுகின்ற பதிவில் கவனமாக இருப்பார்கள் என்று நம்புகின்றேன்..!இனி இந்த பின்னூட்ட சண்டை விளக்கங்கள் வேண்டாம் என்று ஆசைப்படுகிறேன்..!

அன்புடன்,
http://vetripages.blogspot.com/

அலைகள் பாலா said...

//பாலா ரொம்ப கோபக்காரரோ... //

கோவம் லாம் இல்ல பாஸ். தனியாக சொன்னால், இதுவரை அந்த பதிவுகளைப் படித்த அனைவருக்கும் சரியான கருத்துக்கள் சென்றடையாதே என்ற எண்ணம் தான் பொதுவில் சொல்ல வைத்தது. மற்ற படி எந்த கோவமும் இல்லை, மருத்துவம் தவிர நண்பரின் எந்த பதிவையும் நான் விமர்சிக்க வில்லை.

DR.K.S.BALASUBRAMANIAN said...

மருத்துவ பட்டம் பெற்றவர்கள் மட்டுமே மருத்துவ குறிப்புகள், மருத்துவ பதிவுகள் எழுதவேண்டும் என்று சட்டம் வந்தால் நன்றாக இருக்கும்.

DR.K.S.BALASUBRAMANIAN said...

அவசர சிகிச்சை(emergency) மற்றும் அறுவை சிகிச்சை(surgery) நோய் கண்டறியும்(diagnosis) முறை ஆகியவற்றில் நவீன மருத்துவம் மிக முன்னேறியுள்ளது.
மாரடைப்பு(acute myocardial infarction), ACUTE ABDOMEN, குடலிறக்கம்(hernea), போன்ற நோய்களுக்கு அலோபதியால் மட்டுமே சிறந்த சிகிச்சையளிக்க முடியும். ஆனால் மஞ்சள் காமாலை(hepatitis), சிறுநீரக கற்கள், மூட்டுவழி(arthritis), ஒவ்வாமை (allergy), நாட்பட்ட சளி(chronic bronchitis), மூலம்(piles), போன்ற எத்தனையோ நோய்களுக்கு சித்த வைத்தியத்தில் சிறந்த மருந்தளிக்க முடியும். இதே போல் ஹோமியோபதியில் சில நோய்கள்.

இயற்கை வைத்தியம் பற்றி எனக்கு தெரியாது.

எனவே வீண் சண்டை வேண்டாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட நமக்கும் இங்க விளம்பரமா? சரி சரி. சண்டை வேண்டாம் சமாதானமா போகலாம்...

அருண் பிரசாத் said...

@ என்னது நானு யாரா?
Medical Emergencies ல் மட்டும் ஆங்கில மருத்துவத்தை நாடலாம் என்ற உங்கள் வாதம், உங்கள் கொள்கையில் இருந்து முரண்படுகிறது.

@ பாலா
ஒரு குறிப்பிட்ட பதிவை சுற்றியே இந்த எதிர் பதிவு இருப்பதாக தோன்றுகிறது. அவரின் மற்றபதிவுகள் நல்ல பதிவு என ஒத்துக்கொள்கிறீர்களா?


ஆனால், இது ஒரு நல்ல விவாதம். பதிவர்களுக்குள் போட்டி இருக்கலாம் சண்டை கூடாது

GSV said...

நல்ல ஆரோகியமான வாதம், நடக்கட்டும்.

Anonymous said...

அலைகள் பாலா அவர்களுக்கு, வணக்கம்! உங்கள் வலைப்பதிவிற்கு முதன்முதலாக வருகிறேன்! :-)

ஒன்று சொல்கிறேன், தவறாக எண்ண வேண்டாம், ப்ளீஸ்.

ஒரு தவறான மருத்துவ தகவல் மக்களிடம் சேரக்கூடாது என்ற உங்கள் எண்ணம் சரியானது... ஆனால், அதை நீங்கள் கையாண்ட முறை தவறு என எண்ணுகிறேன்.

என்னது நானு யாரா? (வசந்த்) எனக்கு முன்னரே தெரியும். நல்ல நண்பர். அவர் சொல்வதில் தப்பு இருந்திருந்தால் மறைமுகமாக அவருக்கு மின்-கடிதம் எழுதி அவரையே தான் வெளியிட்ட தகவல் தவறென பதிவிட சொல்லியிருக்கலாம்.

எல்லோர் மத்தியிலும் அவரை எவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ அவ்வளவு மட்டம் தட்டி விட்டீர்கள்.

அவர் என்ன மக்கள் செத்து மடியட்டும் என வேண்டுமென்றேவா எழுதியிருப்பார்? யானைக்கும் அடி சறுக்குமல்லவா?

அதுமட்டுமல்ல, இயற்கை மருத்துவத்தை இவ்வளவு மட்டம் தட்டுவது உங்கள் அறியாமையைத் தான் குறிக்கிறது.

ஐரோப்பியர்கள் கூட இந்திய ஆயுர்வேத முறைகளை படித்து, ஆராய்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் ஏன் தங்களுக்கு இ.மருத்துவத்தில் இவ்வளவு வெறுப்பு?

ப்ளிஸ், மருபடியும் சொல்கிறேன். தவறாக எண்ண வேண்டாம். தங்களின் இந்த கட்டுரையைப் படித்த உடன் என் மனதில் உதித்ததைச் சொல்கிறேன்.