வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Monday, September 6, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 3

முந்தைய  பதிவுகள்,
சுகரும் ஃபிகரும் பாகம் - 1
சுகரும் ஃபிகரும் பாகம் - 2



  தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் கலைச் சொற்கள்
    ஹைபோகிளைசீமியா(hypoglycaemia)
                - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்த நிலை
    ஹைபர்கிளைசீமியா(hyperglycaemia)
                     - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமான நிலை

     Sickness comes on horseback but departs on foot.  ~Dutch Proverb



   நம் உடல் ஒரு அழகான வெனிஸ் நகரம்.
                     ஆம். உடலின் எல்லா செல்களும் இரத்த ஓட்டத்தில் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுள்ளன.
                    இரத்த ஓட்டம் என்றால் சாதாரண ஓட்டம் இல்லைங்க. வலது இதயத்தில் கிளம்பி, நுரையீரலுக்கு போய் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு, அப்படியே இடது இதயத்துக்கு வந்து, அங்கிருந்து பல பாகமாக பிரிந்து உடல் முழுவதும் சென்று, தேவையானவற்றை கொடுத்துவிட்டு, கழிவுகளை எடுத்துக்கொண்டு, சிறுநீரகத்தில் அந்தக் கழிவுகளை வெளியேற்றிவிட்டு, குடல் பகுதியில் இன்பாக்ஸ்-ல் வந்த உணவில் சத்துப் பொருட்களை உறிஞ்சி, கல்லீரலுக்கு போய் ஸ்பேம் செக் பண்ணிட்டு, திரும்ப வலது இதயத்திற்கு வந்தால்,..... ஸ்ஸ்ஸ் அப்பாடா! ஆனா ரெஸ்ட் கிடையாது. உடனே திரும்ப நுரையீரலுக்கு அனுப்பிவிடும் இதயம். இப்படி பிறந்ததில் இருந்து ஒரு செகண்ட் கூட ரெஸ்ட் எடுக்காம ஓடுறது தான் இரத்த ஓட்டம்.

               இந்த இரத்த ஓட்டத்தின் மூலமாக மட்டுமே அனைத்து செல்களுக்கும் குளுக்கோஸ் பரிமாற்றம் நடக்கிறது. அதனால், இரத்தத்தில் குளுக்கோஸ் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது.

              நம் கதையில், (கதை மறந்து விட்டால் ஒருமுறை பார்த்துக் கொள்ளவும்) வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறி, பால் போன்ற பொருட்களை மாரிக்கண்ணு தான் வாங்கி வர வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவன் கையில் பணம் இருப்பது எவ்வளவு அவசியம்?

                   இரத்தத்தில் குளுக்கோஸ் அவசியம். ஓ.கே. அதிகமாக இருந்தால் என்ன ஆகும்?

             ஏற்கனவே நாம் சொன்னது போல,
   இரத்தத்தில் குளுக்கோஸ்- குடிகாரன் கையில் பணம்.
 ஒரு அளவுக்கு இருந்தா பிரச்சனை இல்ல. அதிகமா இருந்தா ஆப்பு தான்.

   நம்ம இரத்தத்தில இருக்க குளுக்கோஸ் யூரின்ல லீக் ஆகாம தடுக்குறது கிட்னி தான். ஓரளவுக்கு தான் அதனால தடுக்க முடியும். அதாவது சுமார் 180mg/dl வரை. அதுக்கு மேல இரத்த சர்க்கரை கூடினா "போய் தொலை. என்னால தடுக்க முடியல." என்று வழியனுப்பி வைத்துவிடும். போற குளுக்கோஸ் சும்மா போகாது. கூடவே உடம்புல இருக்க தண்ணீரையும் கூட்டிகிட்டு போகும். அதனால அதிகமா யூரின் போகும். யூரின் அதிகமா போறதால தண்ணீர் அதிகமா தவிக்கும். குளுக்கோஸ் அதிகமா போறதால, பசியும் அதிகமா எடுக்கும்.

 இப்போ அடுத்த எடுத்துக்காட்டு.

  யூரின்ல போற குளுக்கோஸ் - ஒயின்ஷாப் பார்ல செலவாகுற பணம்.

இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாக  இருந்தால் (ஹைபர்கிளைசீமியா) வேறு என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
   நாவறட்சி, அதிக முறை சிறுநீர் கழித்தல், இரவில் சிறுநீர் வருவதால் தூக்கமின்மை, உடலுக்கு தேவையான குளுக்கோஸ் வெளியேறுவதால் சோர்வு, தளர்ச்சி, உடல் எடையில் மாற்றம்,  அதிக குளுக்கோஸ் காரணமாக, நோய்த் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மன உளைச்சல் - இவை உடனடியாக ஏற்படும்.

   நீண்ட காலமாக ஹைபர்கிளைசீமியா இருந்தால் இரத்தக் குழாய்கள், நரம்புகள் பாதிக்கப்படும். கண், சிறுநீரகத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுவதால் கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்ப்படும். இதயம், மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுவதால் இதய அடைப்பு, பக்கவாதம் ஏற்ப்படும். நரம்புகள் பாதிக்கப் படுவதால் தலைசுற்றல், புற நரம்புகளில் வலி, எரிச்சல்  போன்றவை ஏற்ப்படும்
  இரத்தத்தில குளுக்கோஸ் அதிகமா இருந்தா இவ்வளவு வருமா? ஆவ்வ்வ்வ்......


.

6 comments:

Vadamally said...

romba arumaiya soneenga ponga

அலைகள் பாலா said...

நன்றி நண்பரே

எஸ்.கே said...

நல்லாயிருக்கு நண்பரே! மருத்துவ விசயங்களை சொன்னாலும் அதை ஜாலியா எளிமையா சொல்றீங்க!

அலைகள் பாலா said...

நன்றி நண்பரே

நிலாமதி said...

உங்கள் பதிவுகள் இனிப்பு மருந்து போல் அருமை. தொடர்ந்து வருவேன். பாராடுக்கள். உங்கள்சேவைக்கு .

அலைகள் பாலா said...

@ நிலாமதி said...

தங்களது பாராட்டு சந்தோசமாக இருக்கிறது.