வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Friday, September 10, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 4

  முதல்  மூன்று பாகங்களிலும் சர்க்கரை வியாதியின் அடிப்படை விசயங்களைப் பார்த்தோம். இதுவரை நாம் தெரிந்து கொண்ட விசயங்களில் இருந்து ஒரு எளிய ரியல் டைம் எடுத்துக்காட்டு.



 டயாபடிஸ் இல்லாத நார்மல் உடல்

 காலை 8.00 மணி : 
         ஒரு வடை கொஞ்சம் பொங்கல்

        9.00 a.m
            உணவு குளுக்கோஸாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. இரத்த குளுக்கோஸ் அளவு கூடுகிறது.

          9.01 a.m
             உடனே இன்சுலின் செயல்பட்டு குளுக்கோஸை  சேமிக்கிறது/செலவழிக்கிறது.

           9.01 to 9.30
            இரத்த குளுக்கோஸின் அளவு கட்டுக்குள் வருகிறது.

           10.30 a.m
            உடல் இயக்கத்திற்கு குளுக்கோஸ் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால் இரத்தத்தில் அதன் அளவு குறையத் தொடங்குகிறது. 

          10.31 a.m to 1.00 p.m
                       குளுக்கோஸை மீட்டு எடுக்கும் ஹார்மோன்கள் செயல்பட தொடங்கி இன்சுலின் சேமித்த குளுக்கோஸை மீட்டு இரத்தத்திற்கு அளிக்கின்றன.

         1.00 p.m
         அடுத்த சாப்பாடு. மீண்டும் அதே நிகழ்வு.


   இது போன்று தான் இரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையாக வைக்கப்படுகிறது. உடலுக்கு தேவையான குளுக்கோஸும் வழங்கப்படுகிறது.

    சிகிச்சை பெறாத டயாபடிஸ் நோயாளியின் உடலில்  இது எப்படி நடக்கும்?

காலை 8.00 மணி
       ஒரு வடை கொஞ்சம் பொங்கல்

   9.00 a.m
      இரத்ததில் குளுக்கோஸின் அளவு கூடுகிறது.

   9.01 a.m
      இன்சுலின் இல்லாததால் ஹைபர்கிளைசீமியா வருகிறது ( முழு விளக்கத்திற்கு பாகம் மூன்றைப் பார்க்கவும்).
  
    9.01 to 9.30 a.m
          குளுக்கோஸை சேமிக்க முடிவதில்லை. இரத்தத்தில் அதிகமாக குளுக்கோஸ் இருப்பதால் இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுகின்றன.  


 
9.30 to 10.00 a.m
       இரத்ததில் சர்க்கரை தொடர்ந்து அதிகரிக்கிறது. சிறுநீரில் வெளியேறுகிறது.

10.00 a.m
       உடல் இயக்கத்திற்கு பயன்படுத்தப் பட்டதாலும், சிறுநீரில் வெளியேறியதாலும் இரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது.  

 10.30 a.m
     சேமிக்கப் படாததால் குளுக்கோஸை மீட்டு எடுக்கவும் முடிவதில்லை.

10.30 a.m-க்கு பிறகு
     குளுக்கோஸ் பற்றாக்குறையால் சோர்வு, தளர்ச்சி, மயக்கம் ஏற்படுகிறது.

        இந்த படத்தை கொஞ்ச நேரம் முறைச்சு பாத்தா நிறையா விஷயம் புரியும்.

  எனவே டயாபடீஸ் நோயாளி அதிக குளுக்கோஸ் மற்றும் குறைந்த குளுக்கோஸ் இரண்டாலும் அவதிப்படுவார். இரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையாக இருக்காது. உடலுக்கும் தேவையான குளுக்கோஸ் கிடைக்காது. (குறிப்பு: நேரங்கள் எடுத்துக்காட்டுக்காக போடப்பட்டவை. நபருக்கு நபர் அவை மாறும்.)

  முதல் மூன்று பாகங்களில் விளக்கிய விசயங்களையே இங்கு எடுத்துக்காட்டாகத் தந்திருக்கிறேன். இதில் சந்தேகம் இருந்தால் அவற்றை படித்துப் பார்க்கவும். அப்படியும் தீர வில்லை என்றால், மெயில் அல்லது பின்னூட்டம் வழியாக தெரியப்படுத்தவும்.
 
  பிடித்து இருந்தால், நான்கு பேருக்கு இந்த பதிவு தெரிய வேண்டும் என்று நினைத்தால் ஓட்டுப் போடுங்கள்.
 சுகரும் ஃபிகரும் பாகம் -3
 சுகரும் ஃபிகரும் பாகம் -2
 சுகரும் ஃபிகரும் பாகம் -1

 



    
 

3 comments:

எஸ்.கே said...

செம சூப்பர். அருமையா விளக்கியிருக்கீங்க நீங்க இந்த தொடரை முடிச்ச உடனே இதை ஒரு இ-புக்கா போடுங்க நிச்சயம் சாதாரண மக்களுக்கு நீரிழிவு நோய் பற்றின முழுமையான அறிவு கிடைக்கும்!

அலைகள் பாலா said...

ரொம்ப நன்றி நண்பரே

Anonymous said...

Very good detailing, thank you for your info.
Duke Daniel