வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Monday, September 6, 2010

நகைக்கடை விளம்பர டிஸ்கசனில் தப்பி வந்தவரின் மரண வாக்குமூலம்

 முஸ்கி: சத்தியமா இது கற்பனை தானுங்கோ.

  நகைக்கடை விளம்பரத்தின் டிஸ்கசனில் கலந்து கொண்ட ஒரு நபர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் மூலம் உலகிற்கு அதிர்ச்சி தரும் விஷயங்கள் கசிந்துள்ளன.  டிஸ்கசனில் நடந்ததாக அவர் கூறியதாவது.

விஜய் : சைலன்ஸ். யாரும் பேசக் கூடாது. டிஸ்கசன் ஆரம்பிங்க.

இயக்குனர் (பவ்யமாக) : பேசாம டிஸ்கசன் பண்ண முடியாது சார்.

விஜய்: ஒரு டாக்டர்க்கே சொல்லித்தரியா? தமிழ்நாட்டுல என்ன எதுத்து பேசுன மொத ஆள் நீ தான்.

உதவி இயக்குனர்: அது இல்ல சார்........

விஜய்: இரண்டாவது ஆள் நீ தான்.  

நகைக்கடை  ஓனர்: (மொபைலில்). ஹலோ யாரு தாவூத்தா? ஏக் மா தோ துக்கடா. இங்க ஒருத்தன் லொள்ளு பண்ணிகிட்டே இருக்கான்.................. இல்ல இல்ல. உடனே போட வேண்டாம். ஒத்து வரலைனா சொல்றேன்.


                    அழகா இருந்தாலே பொறாமை. பஸ் ஸ்டாப்ல ஏதோ ஒரு நாயி பண்ணுன வேலை

விஜய்: ண்ணா! இதுக்குலாம் கோவிச்சுகலாமா? வாங்கண்ணா நம்ம டிஸ்கசன்க்கு போலாம்.

இயக்குனர்: சார் முதல் ஷாட். நீங்க கார்ல இருந்து இறங்கி வரீங்க.

விஜய்: சூப்பர். உடனே ஓபனிங் சாங். இப்ப தான் விவேகா பேசுனார். "அரிசினா ஆட்டுக்கல்லு, மாவுனா தோசைகல்லு"னு சூப்பர் சாங் எழுதி வச்சுருக்கார்.

இயக்குனர்: விளம்பரமே 30 செகண்ட் தான். இதுல சாங் லாம் வைக்க முடியாது.

விஜய்: சாங் இல்லையா? கோக் விளம்பரத்துல வச்சாங்க. நல்லா என்ன ஏமாத்துறிங்க. நெக்ஸ்ட்?

இயக்குனர்: ஒரு ஸ்கூல்க்கு போய் அங்க இருக்குற மணிய பாக்குறிங்க. உடனே பிளாஷ்பேக்.

விஜய்: நா சொல்றேன். சின்ன வயசுல, ஸ்கூல் மணிய இரும்பு கடைல போட்டு, பேரிச்சம்பழம் வாங்கி சாப்பிட்டுறேன். அதனால ஊர விட்டு ஓடி வந்து தி.நகர்ல வெல்டிங் கடைல வேலை பாக்குறேன். அப்ப அசின் உங்க அப்பா, அம்மா யாருன்னு கேக்குது. உடனே ஊருக்குப் போறேன். என்னாத்த சொல்வேனுங்கோ. வடுமாங்கா ஊறுதுங்கோ.

இயக்குனர்: இதென்ன சிவகாசி ரீமேக்கா? கான்செப்ட்ட கேளுங்க சார். நீங்க பெல் அடிக்கும் போது வாட்ச்மேன் வந்து விஜய்னு சொல்றார்.

விஜய்: இந்த கான்செப்ட் சரி இல்ல சார். நகைக்கடை விளம்பரம் எப்படி இருக்கணும் னு நான் சொல்றேன் பாருங்க. வில்லன் நகையை கொள்ளை அடிச்சுட்டு ப்ளைட்ல தப்பிச்சு போறான். நான் சைக்கிள்ல விரட்டிகிட்டே போறேன். சரியான சேஸிங் சீன். அவன் இந்தியா பார்டர தாண்டும் போது சைக்கிள்ல முன் பிரேக் பிடிச்சு அப்படியே பறந்து பிளைட்குள்ள போயி நகைய காப்பாத்துறேன்.

  கேட்டுக்கொண்டிருந்த  ஒரு உதவி இயக்குனருக்கு திடீரென்று காக்கா வலிப்பு வந்து இழுக்கிறது. அவரை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு செல்கின்றனர்.

விஜய்: இந்த கான்செப்ட் சரி இல்ல போல. நீங்க சொன்னதே பண்ணலாம்.

இயக்குனர்: வாட்ச்மேன் விஜய்னு சொன்னது, தலைவாசல் விஜய்ய. அவர் தான் ஹெட்மாஸ்டர். உடனே கோவிச்சுக்கிட்டு நீங்க வந்த கார்லயே திரும்பி போயிடுறிங்க.

விஜய்: திரும்பி போறதுக்கு முன்னாடி ஒரு பஞ்ச் டயலாக் வச்சா நல்லா இருக்கும். நீங்க பிஸ்கட் செய்ய தான் தங்கம் வாங்குவிங்க, நாங்க பிரட் செய்ய, பிஸ்ஸா செய்ய, ஜாங்கிரி செய்ய, மசாலா கடலை செய்ய, கார சேவு செய்ய தங்கம் வாங்குவோம்.

  மற்றொரு உதவி இயக்குனர் மாடியில் இருந்நது குதிக்க, 108க்கு கால் பறக்கிறது. கொலைக் கேஸ் ஆகிவிடும் என அனைவரும் தலைதெறிக்க ஓட, டிஸ்கசன் முடிந்தது.

6 comments:

Robin said...

:)

பெசொவி said...

எல்லாம் சரி, சுகரும் பிகரும் அடுத்த பாகம் எங்கே? (சீரியஸா படிச்சுகிட்டு வர்றேங்க, முழுசா சொல்லிடுங்க!)

அலைகள் பாலா said...

வந்துகிட்டே இருக்கு அண்ணாச்சி. ஆன் தி வே.

Ramesh said...

Kalakkal. Padhilaye vittutteengale.

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்குங்க நகைச்சுவை.

அலைகள் பாலா said...

நன்றி நண்பர்களே