வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....
Showing posts with label disease series. Show all posts
Showing posts with label disease series. Show all posts

Friday, September 10, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 4

  முதல்  மூன்று பாகங்களிலும் சர்க்கரை வியாதியின் அடிப்படை விசயங்களைப் பார்த்தோம். இதுவரை நாம் தெரிந்து கொண்ட விசயங்களில் இருந்து ஒரு எளிய ரியல் டைம் எடுத்துக்காட்டு.



 டயாபடிஸ் இல்லாத நார்மல் உடல்

 காலை 8.00 மணி : 
         ஒரு வடை கொஞ்சம் பொங்கல்

        9.00 a.m
            உணவு குளுக்கோஸாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. இரத்த குளுக்கோஸ் அளவு கூடுகிறது.

          9.01 a.m
             உடனே இன்சுலின் செயல்பட்டு குளுக்கோஸை  சேமிக்கிறது/செலவழிக்கிறது.

           9.01 to 9.30
            இரத்த குளுக்கோஸின் அளவு கட்டுக்குள் வருகிறது.

           10.30 a.m
            உடல் இயக்கத்திற்கு குளுக்கோஸ் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால் இரத்தத்தில் அதன் அளவு குறையத் தொடங்குகிறது. 

          10.31 a.m to 1.00 p.m
                       குளுக்கோஸை மீட்டு எடுக்கும் ஹார்மோன்கள் செயல்பட தொடங்கி இன்சுலின் சேமித்த குளுக்கோஸை மீட்டு இரத்தத்திற்கு அளிக்கின்றன.

         1.00 p.m
         அடுத்த சாப்பாடு. மீண்டும் அதே நிகழ்வு.


   இது போன்று தான் இரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையாக வைக்கப்படுகிறது. உடலுக்கு தேவையான குளுக்கோஸும் வழங்கப்படுகிறது.

    சிகிச்சை பெறாத டயாபடிஸ் நோயாளியின் உடலில்  இது எப்படி நடக்கும்?

காலை 8.00 மணி
       ஒரு வடை கொஞ்சம் பொங்கல்

   9.00 a.m
      இரத்ததில் குளுக்கோஸின் அளவு கூடுகிறது.

   9.01 a.m
      இன்சுலின் இல்லாததால் ஹைபர்கிளைசீமியா வருகிறது ( முழு விளக்கத்திற்கு பாகம் மூன்றைப் பார்க்கவும்).
  
    9.01 to 9.30 a.m
          குளுக்கோஸை சேமிக்க முடிவதில்லை. இரத்தத்தில் அதிகமாக குளுக்கோஸ் இருப்பதால் இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுகின்றன.  


 
9.30 to 10.00 a.m
       இரத்ததில் சர்க்கரை தொடர்ந்து அதிகரிக்கிறது. சிறுநீரில் வெளியேறுகிறது.

10.00 a.m
       உடல் இயக்கத்திற்கு பயன்படுத்தப் பட்டதாலும், சிறுநீரில் வெளியேறியதாலும் இரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது.  

 10.30 a.m
     சேமிக்கப் படாததால் குளுக்கோஸை மீட்டு எடுக்கவும் முடிவதில்லை.

10.30 a.m-க்கு பிறகு
     குளுக்கோஸ் பற்றாக்குறையால் சோர்வு, தளர்ச்சி, மயக்கம் ஏற்படுகிறது.

        இந்த படத்தை கொஞ்ச நேரம் முறைச்சு பாத்தா நிறையா விஷயம் புரியும்.

  எனவே டயாபடீஸ் நோயாளி அதிக குளுக்கோஸ் மற்றும் குறைந்த குளுக்கோஸ் இரண்டாலும் அவதிப்படுவார். இரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையாக இருக்காது. உடலுக்கும் தேவையான குளுக்கோஸ் கிடைக்காது. (குறிப்பு: நேரங்கள் எடுத்துக்காட்டுக்காக போடப்பட்டவை. நபருக்கு நபர் அவை மாறும்.)

  முதல் மூன்று பாகங்களில் விளக்கிய விசயங்களையே இங்கு எடுத்துக்காட்டாகத் தந்திருக்கிறேன். இதில் சந்தேகம் இருந்தால் அவற்றை படித்துப் பார்க்கவும். அப்படியும் தீர வில்லை என்றால், மெயில் அல்லது பின்னூட்டம் வழியாக தெரியப்படுத்தவும்.
 
  பிடித்து இருந்தால், நான்கு பேருக்கு இந்த பதிவு தெரிய வேண்டும் என்று நினைத்தால் ஓட்டுப் போடுங்கள்.
 சுகரும் ஃபிகரும் பாகம் -3
 சுகரும் ஃபிகரும் பாகம் -2
 சுகரும் ஃபிகரும் பாகம் -1

 



    
 

Monday, September 6, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 3

முந்தைய  பதிவுகள்,
சுகரும் ஃபிகரும் பாகம் - 1
சுகரும் ஃபிகரும் பாகம் - 2



  தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் கலைச் சொற்கள்
    ஹைபோகிளைசீமியா(hypoglycaemia)
                - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்த நிலை
    ஹைபர்கிளைசீமியா(hyperglycaemia)
                     - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமான நிலை

     Sickness comes on horseback but departs on foot.  ~Dutch Proverb



   நம் உடல் ஒரு அழகான வெனிஸ் நகரம்.
                     ஆம். உடலின் எல்லா செல்களும் இரத்த ஓட்டத்தில் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுள்ளன.
                    இரத்த ஓட்டம் என்றால் சாதாரண ஓட்டம் இல்லைங்க. வலது இதயத்தில் கிளம்பி, நுரையீரலுக்கு போய் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு, அப்படியே இடது இதயத்துக்கு வந்து, அங்கிருந்து பல பாகமாக பிரிந்து உடல் முழுவதும் சென்று, தேவையானவற்றை கொடுத்துவிட்டு, கழிவுகளை எடுத்துக்கொண்டு, சிறுநீரகத்தில் அந்தக் கழிவுகளை வெளியேற்றிவிட்டு, குடல் பகுதியில் இன்பாக்ஸ்-ல் வந்த உணவில் சத்துப் பொருட்களை உறிஞ்சி, கல்லீரலுக்கு போய் ஸ்பேம் செக் பண்ணிட்டு, திரும்ப வலது இதயத்திற்கு வந்தால்,..... ஸ்ஸ்ஸ் அப்பாடா! ஆனா ரெஸ்ட் கிடையாது. உடனே திரும்ப நுரையீரலுக்கு அனுப்பிவிடும் இதயம். இப்படி பிறந்ததில் இருந்து ஒரு செகண்ட் கூட ரெஸ்ட் எடுக்காம ஓடுறது தான் இரத்த ஓட்டம்.

               இந்த இரத்த ஓட்டத்தின் மூலமாக மட்டுமே அனைத்து செல்களுக்கும் குளுக்கோஸ் பரிமாற்றம் நடக்கிறது. அதனால், இரத்தத்தில் குளுக்கோஸ் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது.

              நம் கதையில், (கதை மறந்து விட்டால் ஒருமுறை பார்த்துக் கொள்ளவும்) வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறி, பால் போன்ற பொருட்களை மாரிக்கண்ணு தான் வாங்கி வர வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவன் கையில் பணம் இருப்பது எவ்வளவு அவசியம்?

                   இரத்தத்தில் குளுக்கோஸ் அவசியம். ஓ.கே. அதிகமாக இருந்தால் என்ன ஆகும்?

             ஏற்கனவே நாம் சொன்னது போல,
   இரத்தத்தில் குளுக்கோஸ்- குடிகாரன் கையில் பணம்.
 ஒரு அளவுக்கு இருந்தா பிரச்சனை இல்ல. அதிகமா இருந்தா ஆப்பு தான்.

   நம்ம இரத்தத்தில இருக்க குளுக்கோஸ் யூரின்ல லீக் ஆகாம தடுக்குறது கிட்னி தான். ஓரளவுக்கு தான் அதனால தடுக்க முடியும். அதாவது சுமார் 180mg/dl வரை. அதுக்கு மேல இரத்த சர்க்கரை கூடினா "போய் தொலை. என்னால தடுக்க முடியல." என்று வழியனுப்பி வைத்துவிடும். போற குளுக்கோஸ் சும்மா போகாது. கூடவே உடம்புல இருக்க தண்ணீரையும் கூட்டிகிட்டு போகும். அதனால அதிகமா யூரின் போகும். யூரின் அதிகமா போறதால தண்ணீர் அதிகமா தவிக்கும். குளுக்கோஸ் அதிகமா போறதால, பசியும் அதிகமா எடுக்கும்.

 இப்போ அடுத்த எடுத்துக்காட்டு.

  யூரின்ல போற குளுக்கோஸ் - ஒயின்ஷாப் பார்ல செலவாகுற பணம்.

இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாக  இருந்தால் (ஹைபர்கிளைசீமியா) வேறு என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
   நாவறட்சி, அதிக முறை சிறுநீர் கழித்தல், இரவில் சிறுநீர் வருவதால் தூக்கமின்மை, உடலுக்கு தேவையான குளுக்கோஸ் வெளியேறுவதால் சோர்வு, தளர்ச்சி, உடல் எடையில் மாற்றம்,  அதிக குளுக்கோஸ் காரணமாக, நோய்த் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மன உளைச்சல் - இவை உடனடியாக ஏற்படும்.

   நீண்ட காலமாக ஹைபர்கிளைசீமியா இருந்தால் இரத்தக் குழாய்கள், நரம்புகள் பாதிக்கப்படும். கண், சிறுநீரகத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுவதால் கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்ப்படும். இதயம், மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுவதால் இதய அடைப்பு, பக்கவாதம் ஏற்ப்படும். நரம்புகள் பாதிக்கப் படுவதால் தலைசுற்றல், புற நரம்புகளில் வலி, எரிச்சல்  போன்றவை ஏற்ப்படும்
  இரத்தத்தில குளுக்கோஸ் அதிகமா இருந்தா இவ்வளவு வருமா? ஆவ்வ்வ்வ்......


.

Wednesday, August 18, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 2


 
                                       கையில் கொஞ்சம் காசு சேர்ந்தாலே மனித மூளையை நாய் நக்கிவிடும் போல.(காசு இல்லனா மனுசனே நாய் மாதிரி தான் அது வேறுவிஷயம்). நாலு நோட்ட ஒன்னாப் பாத்த உடனே, "பாருக்கு போலாமா, பப் க்கு போலாமா, இல்ல வேற எங்கயும் போலாமா, இதப் பண்ணலாமா, அதப் பண்ணலாமா" என்று  தோன்றும்.  இந்த மாதிரி பசங்க கெட்டு போகக் கூடாது அப்படிங்கிற நல்ல எண்ணத்தில்  பரிமாண வளர்ச்சியில் உருவானவங்க தான் "ஃபிகரு" (வால்பையன் சார் அப்படியா?) எவ்வளவு சம்பாரிச்சாலும் அவங்களுக்கு செலவு பண்ணவே பத்தாது.இதுல எங்க பாருக்கு போக? கல்யாணம் ஆனவங்க நிலைமை இன்னும் மோசம். காலையில்  பெட்ரோல் காசுக்கு அம்மணிட்ட தான் நிற்க வேண்டும். 
                                         வாழ்க்கைக்குப் பணம் எப்படியோ அப்படித்தான் உடலுக்கு குளுக்கோஸ். வாழ்க்கையை உடலாகவும், பணத்தை குளுக்கோஸாகவும் உருவகப்படுத்திப் புரிந்து கொண்டால், "டயாபடீஸ் பில்டிங்கின் பேஸ்மட்டத்தில் முதல் பில்லரை ஸ்ட்ராங்காக" ஊன்றிவிடலாம்.
        அப்ப ஃபிகரு  இன்சுலினா?
                   - ஆமா. கரெக்ட். அவங்க தான் இன்சுலின்.(இங்க பார்டா. அதுக்குள்ள ரெண்டாவது பில்லர்)
                            ஆதி காலத்தில், மனிதன் வேட்டையாடித் திரிந்த போது அடுத்த வேலை உணவிற்கு நிச்சயமில்லாத நிலை. (அப்ப ரெண்டு ருவா அரிசிலாம் இல்லயா?) எப்பவாவது கிடைக்கும் உணவை வைத்து பொழுதை ஓட்ட வேண்டிய கட்டாயம். அதற்கு நம் கதையில் வருவது போல, மாரிக்கண்ணுக்கு பணத்தை அவனது மனைவி  நிர்வகிப்பது போல, கிடைக்கும் குளுக்கோஸை ஒழுங்காக சேமித்து தேவைப்படும் போது பயன்படுத்த ஒர் அமைப்பு தேவைப்பட்டது., குளுக்கோஸை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட அந்த அமைப்பில் பல ஹார்மோன்கள் இருந்தன. அவற்றுள், தேவைக்கு அதிகமான குளுக்கோஸை சேமிக்கும் பொறுப்பு இன்சுலினிடம் கொடுக்கப்பட்டது. (குளுக்கோஸை மீட்டு, எடுத்துக் கொடுக்கும் பொறுப்புக்கு வேறு ஹார்மோன்கள்)  சனிக்கிழமை வாங்கும் சம்பளத்தை வைத்து, அடுத்த வாரம் வரை குடும்பம் நடத்துவதைப் போல, ஒருமுறை உணவு உண்ட பின் கிடைக்கும் குளுக்கோஸை வைத்து அடுத்து உணவு கிடைக்கும் வரை உடலை இயக்க இவை கற்றுக்கொண்டன.
                    இதில் ஒரு கொடுமை என்னனா, சாப்பிட்ட உடனே இரத்ததில் ஏறுகிற  குளுக்கோஸ், பாருக்கு போறப்ப மாரிக்கண்ணு கைல இருக்க பணம் மாதிரி. உடனே செலவும் ஆயிடும், உடம்புக்கும் கெடுதி. எல்லா பணமும் (குளுக்கோஸ்) செலவாயிட்டா, அப்ப அடுத்த வாரம் வரை குடும்பம் நடத்த......? சுருக்கமா சொன்னா, இரத்ததில் உள்ள குளுக்கோஸ் குடிகாரன் கையில் உள்ள பணம் மாதிரி. உடனே பத்திரப்படுத்தணும். இல்லனா ஆப்பு தான்
குளுக்கோஸ் - பணம்
இரத்தத்தில் குளுக்கோஸ்- குடிகாரன் கையில் பணம்.
                    
                               அப்புறம் எதுக்கு குடிகாரன் கையில பணம் அத புடுங்கிருங்க பா. புடுங்கிடலாமா??
                               அடுத்த பாகத்தில்.... .

டிஸ்கி: சந்தேகங்களையும், கருத்துகளையும் பின்னூட்டத்தில் சொல்லுங்க நட்புகளே..  மறக்காம ஓட்டையும் போட்டுருங்க.

Tuesday, August 17, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 1


        படிச்சவங்களுக்கு சுகர், பாட்டிகளுக்கு சக்கர வியாதி, பீட்ட்ரு விட நெனச்சா டயாபடீஸ், இப்படி நிறைய பெயர்களில் நம் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட வியாதி சுகர் என்ற டயாபடீஸ் என்ற சர்க்கரை வியாதி. இப்போதெல்லாம் இது அந்தஸ்தின் அடையாளம். பொது இடங்களில் "சுகர் கம்மியா போடுங்க, எனக்கு டயாபடீஸ்" என்று சொல்வதை பெருமையாகவே நினைக்கிறார்கள்.
  அது சரிப்பா, சுகருக்கும் ஃபிகருக்கும் என்ன சம்பந்தம்? இருக்கே... சம்பந்தம் இருக்கே..
      ரெண்டுமே பெரிய தொல்லை. ஆனா கூட இருந்தா ஒரு வெட்டி பெருமை.
      சுகரும் சரி ஃபிகரும் சரி பர்ஸ்க்கு பாம் வைக்குறதுல கில்லாடிங்க.
  ரெண்டுமே வாய் கொழுப்புல நமக்கு நாமே வச்சுகிற சூன்யம். (இங்க பார்டா சிலேடைய)
               சுகரு வந்தா மெடிக்கல் ஷாப்
               ஃபிகரு போனா ஒயின்ஷாப்.
         ஆனா ஒரு விசயத்துல சுகர நம்பலாம்.  நம்மவிட்டு ஃபிகர் போனாலும் சுகர் போகாது.
       சுகர் பத்தி சப்ஜெக்ட்க்கே வராம 20 பக்கம் பேசலாம். ஆனா சுகர்னா என்ன?  சுகர் வந்தா கட்டாயம் மாத்திரை சாப்பிடணுமா? இட்லி சாப்பிட்டா நல்லதா? சப்பாத்தி சாப்பிட்டா நல்லதா? எத்தனை சாப்பிடலாம்? இன்சுலின் எப்பப் போடணும்? ... இந்த மாதிரி எக்கச்சக்க கேள்விகள் நம்ம கிட்ட இருக்கு. ஃபிகர பத்தி தெரிந்த அளவுக்கு சுகர பத்தி தெரியல. நம்மில் நிறைய பேருக்கு மருத்துவ அறிவில்   "'பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மட்டம் வீக்கு."
         பேஸ்மட்டத்தில் இருந்து டயாபடீஸ் பத்தி முழுமையாக விளக்குகிற தொடராக இதை ஆரம்பித்துள்ளேன். பொறுமையாக படித்தால் நிச்சயம் டயாபடீஸ் பற்றிய புரிதல் அதிகமாகும்.
         சர்க்கரை வியாதி என்பது நம் உடலில் உணவு சேமிப்பதில் உள்ள குறைபாடு (storage disorder) - இப்படிலாம் சொன்னா ஏதோ 12வது பயாலஜி புக் வாசிக்கிற ஃபீலிங் வந்துரும். ஸ்டோரேஜ் டிஸார்டர்க்குள் போகும் முன் ஒரு சிறிய கதை, புரிதலுக்காக.
    மாரிக்கண்ணுக்குக்  கொத்தனார் வேலை. வாரச் சம்பளம். அவனோட காண்ட்ராக்டர் ரொம்ப நல்லவர். சனிக்கிழமை கரெக்ட்டா சம்பளம் தந்துருவார். மாரிக்கண்ணுக்கு ஒரு கெட்ட பழக்கம். கைல 180 ருவாய்க்கு மேல இருந்தா, எவ்வளோ காசு இருந்தாலும் டாஸ்மாக் பார்க்கு போயி காலியாக்கி விடுவான். கொஞ்ச நேரத்தில பாத்ரூம் போனா எல்லா காசும் தண்ணியா போய்டும்.   ஆனா ஒரு நல்ல பழக்கம் 180க்கு ஒரு பைசா குறைஞ்சாலும் அந்த பக்கம் போக மாட்டான்.(அதென்ன ஒரு கணக்கு 180? பிறகு சொல்றேன்). அதனால சம்பளம் வந்த உடனே எல்லா பணத்தயும் வீட்டுக்காரம்மாட்ட(ஹவுஸ் ஒனர் இல்லிங்க) கொடுத்துடுவான். அவங்க கொஞ்சம் பொறுப்பான குடும்ப தலைவி. அஞ்சறை பெட்டில கொஞ்சம், அலமாரில கொஞ்சம்னு எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வைப்பாங்க.அப்பப்ப செலவுக்கு எடுத்துகுவாங்க. வாரத்தில ஒருநாள் மட்டும் சம்பளம் வந்தாலும் அத வச்சு முழுவாரத்தையும் பிரச்சனையில்லாம சமாளிச்சாங்க. .
                             என்னமோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு? அதுசரி இந்த கதைக்கும் டயாபடீஸ்க்கும் என்ன தொடர்பு? அடுத்த பாகம்.....